நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடுவது ஏன்? எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி எழுதிய முக்கிய லெட்டர்!
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போடுவது ஏன் என்று முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போடுவது ஏன் என்று முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் இன்று மிக முக்கியமான நாள். மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பாக கடந்த வருடம் பதவி ஏற்ற குமாரசாமி தலைமையிலான ஆட்சி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது.
16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களுக்கும் தொண்டர்களுக்கும் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதம்
குமாரசாமி எழுதியுள்ள கடிதத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும். அவர்கள் வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நீங்கள் வாருங்கள், நாம் அமர்ந்து பேசலாம். உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்.

தீய சக்தி
நீங்கள் தீய சக்தியுடன் சேர வேண்டாம். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்திய ஜனநாயகத்தை குழைத்து, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ஆட்சியை பிடிப்பார்கள். அவர்களுடன் நீங்கள் சேர கூடாது.

காரணம் என்ன
நம்பிக்கை வாக்கெடுப்பை நாங்கள் தள்ளி போட்டுதான் வருகிறோம். இதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆட்சியில் இருக்க விரும்பவில்லை. பதவி ஆசை இல்லை எனக்கு. ஆனால் பாஜகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். பாஜக எப்படி எல்லாம் எம்எல்ஏக்களை வாங்க முயற்சி செய்கிறது என்று உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

பாஜக எப்படி
பாஜக எப்படி ஜனநாயகத்தை உடைக்கிறது. எப்படி எல்லாம் சட்டங்களை வளைக்கிறது என்று மக்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவர்களை எப்படி எல்லாம் கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.

ஏன் வெளியே
இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டு வருகிறேன். கர்நாடக அரசியலை படுகுழிக்கு பாஜக கொண்டு சென்றுவிட்டது. இந்திய அரசியலில் மிக மோசமான எடுத்துக்காட்டு ஒன்றை பாஜக இன்று முன் வைத்து உள்ளது, என்று குமாரசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications