அய்யயோ எனக்கு செய்வினை வெச்சுட்டாங்க..4.5 அடி குழியில் விழுந்துட்டேன்.. கர்நாடகா பாஜக சோமண்ணா பகீர்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது தமக்கு யாரோ செய்வினை செய்து வைத்துவிட்டதாகவும் தாமே 4.5 அடி குழிவெட்டி விழுந்துவிட்டதாகவும் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சோமண்ணா பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து 9 மாதங்களாகிவிட்டது. இன்னமும் கர்நாடகா பாஜக தலைவர்கள் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக உள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் மாநில பாஜக தலைவர் பதவி யாருக்கு என்பதில் பெரும் மல்யுத்தம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வ எடியூரப்பா தன் மகன் விஜயேந்திராவை ஜெயிக்க வைத்தார். இதனால் இலவு காத்த கிளிகளாக இருந்த மாஜி அமைச்சர் சோமண்ணா உள்ளிட்டோர் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.
காங்கிரஸுக்கு தாவல்?: ஒரு கட்டத்தில் சோமண்ணா, 5 பாஜக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு ஓடிப் போய்விடுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸுக்கு ஓடிப் போக திட்டமிட்ட பாஜக தலைவர்கள் அப்படியே அமைதி காத்து வருகின்றனர்.
செய்வினை வெச்சுட்டாங்க.. : இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்த மூத்த பாஜக தலைவர் சோமண்ணா பெங்களூரில் நேற்ரு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சோமண்ணா கூறியதாவது: பாஜகவில் அநீதி இழைக்கப்படுகிறது. நானே போய் 4.5 அடிகுழி வெட்டி விழுந்துவிட்டேன். கோவிந்தராஜ் நகர் சட்டசபை தொகுதியை நான் யாருக்காகவும் விட்டு கொடுத்திருக்கவே கூடாது. ஆனால் எனக்கு அப்போது யாரோ செய்வினை செய்து வைத்துவிட்டதால் அப்படி ஒரு முடிவை எடுக்கவும் நேரிட்டது.
டெல்லி விசிட்: டெல்லிக்கு போய் பாஜக தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். டெல்லியில் வரும் 9-ந் தேதி பாஜக தலைவர்களை சந்திக்கும் போது கர்நாடகா பாஜக தலைவர்கள் என்னை டார்கெட் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் போக்கை கைவிட வலியுறுத்துவேன். இதன்பின்னர் அனைத்தும் சுமூகமான நிலைமைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடம் கட்டளையிட்டால் அதையும் கூட செய்ய தயாராகவே இருக்கிறேன். இவ்வாறு சோமண்ணா தெரிவித்தார்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications