மே மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.94,016 கோடி - காரணம் இ வே பில்
மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 94,016 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஆண்டின் சராசரி மாத ஜிஎஸ்டி வசூலை விட அதிகமாகும்
டெல்லி: மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடி அளவுக்கு வசூலானது. கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது.
பல முனை வரிகளான வாட் வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி (Entry Tax) பொழுது போக்கு வரி என பலதரப்பட்ட வரி முறைகளாக இருந்த வரி விவிதிப்பு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி (One Nation One Tax) என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் வசூலான தொகை எவ்வளவு என்பதை வரித்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டியில் ரூ.94,016 கோடி வசூலாகியுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வசூலான தொகையில் ரூ.15,866 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.21,691 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.49,120 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூலாகி இருக்கிறது. செஸ் மூலமாக ரூ.7,339 கோடி வசூலாகி இருக்கிறது.
மொத்த தொகை மட்டுமல்லாமல், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் 60.47 தாக்கல்கள் மட்டுமே செய்யப்பட்டன. ஆனால் மே மாதம் 62.46 லட்சம் தாக்கல்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆதியா குறிப்பிட்டிருக்கிறார்.
இ-வே பில் அறிமுகப்படுத்தப்பட்டதால் அதன் தாக்கம் ஜிஎஸ்டி வசூலில் தெரிந்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இன்னும் அதிகமாகும் என்றும் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது.
2017-2018 நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் மொத்தமாக ரூ.47,844 கோடி மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications