பங்கு வர்த்தகத்தில் ரிஸ்க் எடுக்காதீங்க... இந்த வாரம் வச்சு செஞ்சிரும் ஜாக்கிரதை!
இந்திய பங்குச் சந்தைகள் பக்கவாட்டு நிலையிலேயே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மும்பை: பங்குச்சந்தையில் பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க நினைக்காமல், இன்றைக்கு வாங்கிய பங்குகளை நாளை விற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இருப்பு வைக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
திங்கள் கிழமை ஆரம்ப ஜோரில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10400 என்ற புதிய உச்சத்தை தொட்டாலும் அதற்கு மேலும் செல்வதற்கு பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் ஏதும் இல்லாததால் மந்த நிலையிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
இந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளின் முன்பேர வர்த்தகச் சந்தைகளின் கணக்குகள் முடிக்கும் வாரம் என்பதால் எந்தப்பக்கமும் செல்லாமல் சற்று பாதுகாப்பான பக்கவாட்டு நிலையிலேயே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தைகள்
இந்திய வங்கிகளின் மறுசீரமைப்பிற்காகவும் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவும் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த வாரத்தில் ஒருநாள் தவிர்த்து மற்ற நான்கு நாட்களிலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. வாரந்திர இறுதியில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி சுமார் 176 புள்ளிகளும் மும்பை பங்குச்சந்தை குறியீடான் சென்செக்ஸ் சுமார் 650 புள்ளிகளும் அதிகரித்தன.

அமெரிக்கா வட்டி விகித அறிவிப்பு
இந்த வாரத்தில் அமெரிக்காவின் வட்டி விகித அறிவிப்பு தவிர பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் எதுவும் இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகள் பக்கவாட்டு நிலையிலேயே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மந்தநிலையில் வர்த்தகம்
திங்கள் கிழமை ஆரம்ப ஜோரில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10400 என்ற புதிய உச்சத்தை தொட்டாலும் அதற்கு மேலும் செல்வதற்கு பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் ஏதும் இல்லாததால் மந்த நிலையிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

சுட்டுக்கொள்ள வாய்ப்பு
எனவே சிறிய முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தால் தங்களின் பணத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். அப்படியே வர்த்தகத்தில் ஈடுபட நினைத்தாலும் சிறிய அளவில் அதிலும் 10175 என்ற கட்டுப்பாட்டு நிலையை (Stoploss level) வைத்துக்கொண்டு தங்களின் வர்த்தகத்தை தொடரலாம். இல்லையெனில் முதலீட்டாளர்கள் தங்களின் கையை சுட்டுக்கொள்ள நேரிடும்.

வச்சி செஞ்சிரும் ஜாக்கிரதை
பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க நினைக்காமல், இன்றைக்கு வாங்கிய பங்குகளை நாளை விற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இருப்பு வைத்தால், அப்புறம் பங்குச்சந்தை நம்மை வச்சு செய்துவிட்டுப்போகலாம். எனவே உஷார். இதைவிட நல்ல வாய்ப்புகள் வரும் சற்று பொறுத்திறுங்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications