சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப் காங்கிரஸ் தோல்விக்கு நவ்ஜோத்சிங் சித்து தான் காரணமா?- ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம் என்ன?

By
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு நவ்ஜோத் சிங் சித்து தான் காரணம் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபில் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்திய மக்களுக்கு வாழ்த்துகள் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா? பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?

இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

பஞ்சாப்

பஞ்சாப்

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 2017 தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டு 20 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து, ஆம் ஆத்மி சட்டசபை செல்ல இருக்கிறது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ஆம் ஆத்மி
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பகவந்த் மான் எளிமையான பேச்சு, டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு இருந்த பெயர், விவசாயிகள் போராட்டம் இதெல்லாம் சேர்ந்து வாக்குகளாக ஆம் ஆத்மிக்கு சென்றது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோற்றுள்ளது. கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தாலும், 18 இடத்தில் வெல்லும் என எந்த கருத்துக்கணிப்புகளும் கூறவில்லை. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து என எல்லோரும் ஆம் ஆத்மியிடம் தோற்றுள்ளார்கள்.

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி விரைவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. தோல்விக்குப் பிறகு சித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''ஒரு புதிய அமைப்பை பஞ்சாப் மாநிலத்துக்கு அறிமுகப்படுத்திய மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு. மக்களின் இந்த தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் பஞ்சாப் காரன், இங்கு தான் இருப்பேன். எங்கும் செல்ல மாட்டேன். வெற்றியோ தோல்வியோ பஞ்சாப் மீது எனக்கு இருக்கும் அன்பை ஒருபோதும் மாற்றாது'' எனத் தெரிவித்தார்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு சித்து தான் காரணம் என சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினரே. முதல்வர் பதவி தராதது, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாதது, என மனக்கசப்பில் இருந்துள்ளார் சித்து. இதனால் கட்சி வேலைகளில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. சித்துவுக்கும் முன்னாள் முதல்வர் அமரீந்தருக்கும் ஏற்பட்ட பனிப்போரில், அமரீந்தர் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சித்து மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

English summary
Punjab Congress chief Navjot Singh Sidhu says "I congratulate the people of Punjab for this excellent decision of ushering in a new system''
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X