டர்பன் அணிந்தா நீங்க சர்தாரா..? - பிரதமர் மற்றும் கெஜ்ரிவாலை சாடும் பிரியங்கா காந்தி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் டர்பன் அணிந்து இருப்பார்கள். தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் நடத்தியப் போராட்டம், இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பஞ்சாப் தேர்தல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

காங்கிரஸ்
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் மீண்டும் வெற்றி பெற்றி ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதையை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியே, காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி
பஞ்சாப், உத்தரப்பிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலின் காங்கிரஸ் முகமாகவே பிரியங்கா காந்தி அறியப்படுகிறார். உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக சோபிக்காத காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.

பஞ்சாப் பிரசாரம்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது, ''உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம் பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவாலிடம் சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் சொல்லுங்கள். பஞ்சாப் பஞ்சாபியர்களுக்கு சொந்தமானது என்று அவர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களை சர்தார் ஆக்குவதில்லை. அவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து பிறந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்
கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், மோடி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். அவர்கள் இருவருமே ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள். லக்கிம்பூர் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சரின் மகன் விடுதலை ஆகியுள்ளார். இதை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பாஜக விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் வழக்கை வலுவாக மாற்றியிருக்க வேண்டும்'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications