15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை! எஸ்ஐ, எஸ்எஸ்ஐக்கள் என 10,508 பேர் பயன்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதை போல் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் உன்னத பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தீபாவளி, பொங்கல் உள்பட அனைத்து விழா காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது.
மேலும் முக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் போலீசாருக்கு விடுப்பு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும். விடுப்பு இன்றி தொடர்ந்து பணியாற்றி வருவதால் போலீசார் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழக அரசு திட்டம்
மேலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாதது, தொடர்ந்து பணி செய்வது உள்ளிட்ட காரணங்கால் மனச்சோர்வு ஏற்பட்டு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பணியாற்றும் போலீசாரின் பணிச்சுமை மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநில அரசு தொடர்ந்து சில திட்டங்களை அறிவித்து வருகிறது.

எஸ்ஐ, எஸ்எஸ்ஐக்களுக்கு விடுமுறை
இந்நிலையில் தான் தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை நடந்தது. இந்த விவாதத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

10,508 பேர் பயன்
மேலும் இதன் மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு போலீஸ் துறையில் இருந்து வரவேற்பு கிடைத்தது. மேலும் டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் போலீசாருக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்பட்டு வருவதைப்போல அதே பலன்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்திருந்தார்.

அரசாணை வெளியீடு
இந்நிலையில் தான் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே பணீந்திர ரெட்டி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் படி போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த, முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்'' என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications