ஒரே நாள் லீவு விட்டாங்க! பாட்டில்களை வாங்கி குவித்த குடிகாரர்கள்! டாஸ்மாக்குக்கு இவ்வளவு வருமானமா?
சென்னை : நேற்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்று முன் தினம் மட்டும் சுமார் 274 நாட்களுக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

டாஸ்மாக் மதுக்கடைகள்
மேலும் காந்தி ஜெயந்தி சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் நேற்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்று முன் தினம் மட்டும் சுமார் 274 நாட்களுக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுதந்திர தினம்
திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை தேவைக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மது வகைகளை வாங்கிக் குவித்தனர் தமிழக குடிகாரர்கள். இதனால் தமிழகம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் அன்று மாலை மது விற்பனை களைகட்டியது. பெட்டி பெட்டியாகவும், சாக்கு பைகளிலும் வாங்கிச் சென்றனர்.

274 கோடி ரூபாய்
அன்று மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் சுமார் 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் உள்ள மது கடைகளில் மட்டும் சுமார் 58 கோடியே 26 லட்சம் ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த புது வருடப்பிறப்புக்கு விற்பனையானதை விட அதிமாகும்.

மதுரை முதலிடம்
மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்னை மண்டலத்தில் 56 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மூன்றாவதாக சேலத்தில் 54 கோடி ரூபாய்க்கும், கடைசி இடமாக 4வது இடத்தில். கோவை மண்டலத்தில் 52 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications