தடுப்பூசி போடவில்லையா? -தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம்!
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் 2 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மெகா தடுப்பூசி முகாமில், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்கள் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36-வது மெகா தடுப்பூசி முகாம்
மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறித்திருந்த நிலையில், இதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில், இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 50 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகள்
இந்த முகாமில், 18 வயது முதல் 59 வயதுடையவர்கள், பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக பொதுமக்கள் செலுத்திக் கொள்ளாலம். வரும் 30-ம் தேதிக்குள் காலக்கெடு முடிவடைவதால், 30-ம் தேதிக்குப் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட முடியாது. ரூ.386 ரூபாய் கட்டணத்தில்தான் போட வேண்டியிருக்கும். எனவே, இன்று நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி போடாதவர்கள்
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 2 தவணை தடுப்பூசி செலுத்தாவர்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகேயுள்ள தடுப்பூசி முகாமுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications