தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் புது உத்தரவு
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்புக்கான 5 வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் பலகோடி பேர் மீண்டுள்ளனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நான்காவது அலை வீசக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்களில் நடமாடுபவர்கள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத் துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த சில நாள்களாக கேரளா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பிஏ4 மற்றும் பிஏ5 வகை ஒமைக்ரான் புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன.

தடுப்பு நடவடிக்கைகள்
தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது எனவே அதனை ஆரம்ப நிலையில் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

5 வழிமுறைகள் அவசியம்
கொரோனா பரவலை தடுக்க நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், பரிசோதனை நடவடிக்கைகள், தொடர்பில் இருந்தோரை கண்டறிதல், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் என ஐந்து வகையான வழிமுறைகளை கையாளுவதை மாவட்ட நிர்வாகங்கள் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதோரைக் கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications