தீபாவளி லீவு முடியப் போகுது! சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 6,852 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர தமிழகம் முழுவதும் 6,852 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இன்று, நாளை, நாளை மறுதினம் என 3 நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பேருந்துகள்
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றிரவு முதல் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் திரும்பிச் செல்லத் தொடங்குவார்கள். அவ்வாறு அவர்கள் ஊர் திரும்பும் போது கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக 6,852 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத் துறை. 24ஆம் தேதியான இன்றிரவு முதல் 26ஆம் தேதியான நாளை மறுதினம் இரவு வரை இந்தப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி அன்று
தீபாவளி நாளான இன்றே பெரும்பாலானோர் ஊர் திரும்பு வாய்ப்பு குறைவு என்பதால் இன்றிரவு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள். அதேவேளையில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நாளையும், நாளை மறுநாளும் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த 2 நாட்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

5 லட்சம் பேர்
கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாட சென்றிருக்கின்றனர். இதனால் எல்லா முக்கிய ஊர்களுக்குமே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்துத் துறை
சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்றிரவு திருச்சியில் ஆய்வு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகள் மட்டுமின்றி கார்களில் சென்றவர்களும் நாளை சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்சி -சென்னை சாலை போக்குவரத்து நெரிசலால் திணறும் எனத் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications