பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனன் வெற்றியை சொந்த அண்ணன் ஜெயித்தது போல கொண்டாடும் நெட்டிசன்ஸ்
அரி அர்ஜுனனின் வெற்றியை சொந்த அண்ணன் ஜெயித்தது போல கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். சனம், அனிதா ரசிகர்களும் இணைய தளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் தமிழ் நான்காவது சீசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆரி அர்ஜுனன் . 106 நாட்கள் நடந்த இந்த ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வந்த பின்னரும் ஆரியின் வெற்றியை சொந்த அண்ணனின் வெற்றியைப் போல
கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
Recommended Video
விஜய் டிவியில் 106 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன் முடிவடைந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ரேகா தொடங்கி ரம்யா பாண்டியன் வரை ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் பாலாஜியும், ஆரியும் வீட்டிற்குள் தாக்குப்பிடித்தனர்.
பாலாஜியா? ஆரியா இருவரில் யார் வெற்றியாளர் என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் ஆரிதான் என்று பலரும் சொல்வார்கள். சின்ன குழந்தை கூட பிக்பாஸ் பார்த்தது என்றால் அது ஆரிக்காகத்தான். எல்லோரும் கணித்தது போலவே ஆரி பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நேற்றிரவு முதலே ஆரி அர்ஜுனனின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
|
நான் டைட்டில் வின்னர்
ஆரி ஒவ்வொரு முறை பேசும் போதும் அட்வைஸ் செய்யும் போதும் போரடிப்பதாக பலரும் பதிவிட்டனர். ஆரியை பிடிக்காத சில நெட்டிசன்களுக்கு பதிலடி தரும் விதமாக நான் டைட்டில் வின்னர்டா என்று சூரரைப் போற்று படத்தை பதிவிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.
|
சந்தோஷத்தல் அனிதா சனம் ஷெட்டி
ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட உடன் ஆரி ப்ரோ என்று அழைத்த இரண்டு தங்கைகள் அனிதாவும், சனம் ஷெட்டியும் துள்ளிக்குதித்து மகிழ்ந்தனர். அதனை பதிவிட்ட ஒரு நெட்டிசன், ஆரியின் வெற்றியை கொண்டாடுவது இரண்டு சகோதரிகள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
என்னா முறைப்பு
வெற்றியாளராக ஆரி அறிவிக்கப்பட்ட உடன், அதை பல போட்டியாளர்கள் கொண்டாடவில்லை. மேடையில் பார்வையாளராக அமர்ந்திருந்த நிஷா, அர்ச்சானாவின் முறைபை படம் பிடித்து பதிவிட்டு நெட்டிசன்கள் வச்சு செய்கிறார்கள்.
|
அனிதா ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆரியின் வெற்றியை அனிதா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
|
லாஸ்லியாவும் வாழ்த்து
ஆரியின் வெற்றிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லாஸ்லியா.
|
எகிறிய டிஆர்பி
நேர்மை வெல்லும் என்று பதிவிட்டுள்ள நெட்டிசன்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டிஆர்பி எகிறி விட்டது என்று பதிவிட்டுள்ளார். கடந்த 3 சீசன்களை விட இந்த சீசனை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 7.8ல் ஆரம்பித்த டிஆர்பி ரேட்டிங் நான்காவது சீசனில் 15.6 ஆக உயர்வதற்குக் காரணம் ஆரிதான் என்று பதிவிட்டுள்ளனர்.
|
ஆரி ட்வீட்
தனது வெற்றி குறித்து பதிவிட்டுள்ள ஆரி, எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே என்று அடக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனசுதான் ஆரி உங்களை எல்லோருக்கும் பிடிக்க காரணமாக அமைந்திருக்கிறது.