நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்- சென்னை ஈ.சி.ஆரில் ரூ40 கோடியில் பிரமாண்ட பங்களா வாங்கிய ரஜினி மருமகன்!
சென்னை: நடிகர் விஜய் கொடுத்த யோசனைப்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ40 கோடியில் பங்களா வாங்கி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தொழிலதிபர் விசாகன்.
Recommended Video
அரசியலுக்கு வருவாரா? இல்லையா? தனிக் கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்கிற அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். இனி அரசியல் பேச்சுக்கே இடம் இல்லை அறிவித்தார்.
அத்துடன் அரசியலுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் மன்றங்களையும் கலைத்துவிட்டார் ரஜினி. இந்த நிலையில் ரஜினி குடும்பத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்... அன்றே கணித்து சொன்ன ஒன் இந்தியா தமிழ்
செளந்தர்யா மறுமணம்
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ஏற்கனவே விவாகரத்தானவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்தார். இந்த மறுமணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
தொழிலதிபர் விசாகன்
செளந்தர்யா மறுமணம் செய்த விசாகனின் தந்தை வணங்காமுடி, அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர். பல ஆயிரம் ரூபாய் கோடிகளுக்கு அதிபதி. மிகப் பெரிய தொழிலதிபரான விசாகன்- செளந்தர்யா திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தவர் மாஜி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒருவர்தான்.
விசாகன் திட்டமும் விஜய் போனும்
அண்மையில் விசாகன் ஒரு புதிய பிரமாண்ட பங்களாவை வாங்க திட்டமிட்டார். இதனை கேள்விப்பட்ட உடனேயே விசாகனுக்கு போனடித்து ஒரு யோசனை சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய்.
சினிமா பிரபலங்கள் ஏரியா
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதி சினிமா பிரபலங்களின் ஏரியாக உருமாறிவிட்டது. நடிகர் விஜய் இங்குதான் குடியிருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவும் இந்த பகுதியில்தான் வசிக்கிறார். இந்த ஏரியா இப்போது ரொம்ப காஸ்ட்லியாகிவிட்டது.
ரூ40 கோடியில் பிரமாண்ட பங்களா
இதனால் விசாகனிடம் தமது பங்களா அருகே உள்ள பங்களா விலைக்கு வருகிறது.. அதை வாங்குகளேன் என சொல்லியிருக்கிறார் விஜய். இந்த யோசனயை ஏற்றே சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான பங்களாவை வாங்கியிருக்கிறார் விசாகன். இந்த பங்களாவின் மதிப்பு ரூ 40 கோடி!