மன்னிப்பு நஹி.. ஜெய் பீம் விஷயத்தில் ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அதிரடி
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
இதற்கு முன்பு கண்டிராத அளவுக்கு அன்பு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விட்டதாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் இன்று தெரிவித்திருக்கிறார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் ஞானவேல், இந்த திரைப்படத்தை வெளியிட்ட அமேசான் இணையதளம் உள்ளிட்டவற்றுக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .

வன்னியர் சங்கம்
24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கெடு முடிந்து விட்டது. இருப்பினும் நடிகர் சூர்யா அல்லது படக்குழுவினர் அதுபோன்ற எந்த ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை.

அன்புமணி ராமதாஸ்
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு நடிகர் சூர்யா பதிலளித்திருந்தார். அதிலும் அவர் வருத்தம் என்ற வார்த்தை அல்லது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. திரைப்படத்தில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்ற தொனியில் அவரது அறிக்கை இருந்தது.
Recommended Video

பாமக நிர்வாகி அறிவிப்பு
இந்த நிலையில்தான் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் பிறகு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகத்திலிருந்து சூர்யாவுக்கு ஆதரவாக குரல்கள் வரத்தொடங்கின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார் நடிகர் சூர்யா.

சூர்யா ட்வீட்
இந்த நிலையில் இன்று ஒரு ட்விட்டர் பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது. நான் இதற்கு முன்பாக இப்படி அனுபவித்தது கிடையாது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, எனது நன்றி உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறேன். எங்களோடு துணைக்கு நிற்கும் உங்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்து இருக்கிறார் சூர்யா. இதன் மூலம், வருத்தம் தெரிவிக்கும் எண்ணத்தில் சூர்யா இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications