பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறு.. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

வழக்கு
இதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகும்படியும் நடிகை மீரா மீதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இருப்பினும், விசாரணைக்கு ஆஜராகாமல் மீரா மீதுன் தலைமறைவானர்.

கேரளாவில் கைது
அவரை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வைத்து மீரா மிதுனை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது.

ஜாமீன் மனு
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மீரா மிதுனும் மற்றும் சாம் அபிஷேக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பல நாட்களாகத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால்
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதாகவும் முதல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோவில் காரணமாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications