பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறு.. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

வழக்கு
இதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகும்படியும் நடிகை மீரா மீதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இருப்பினும், விசாரணைக்கு ஆஜராகாமல் மீரா மீதுன் தலைமறைவானர்.

கேரளாவில் கைது
அவரை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வைத்து மீரா மிதுனை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது.

ஜாமீன் மனு
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மீரா மிதுனும் மற்றும் சாம் அபிஷேக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பல நாட்களாகத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால்
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதாகவும் முதல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோவில் காரணமாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
இயக்குனர் பாலு மகேந்திரா மகளுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கியபடி அவரே வெளியிட்ட வீடியோ! குவியும் ஆறுதல் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications