"தற்காலிகம்"தான்.. அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை.. ராமதாஸுக்கு ஷாக்.. பாமக தலையில் இடி? என்னாக போகுதோ
வன்னியர் இடஒதுக்கீடு குறித்து ஆர்பி உதயகுமார் பேச்சு அதிர்ச்சியை தந்து வருகிறது
சென்னை: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசிய பேச்சு, பாமகவை அதிர வைத்துள்ளது.
எப்போதுமே தேர்தல் என்றால், பாமக முன்கூட்டியே ரெடியாகிவிடும்.. அல்லது திமுகவோ, அதிமுகவோ யாராவது ஒருத்தர் தைலாபுரத்துக்கு சென்று, பேச்சுவார்த்தையை துவங்கிவிடுவர்..
முதல் கட்சியாக பாமகவை தங்கள் கூட்டணியிலும் சேர்த்து கொள்வர். பாமக எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணி வெற்றி பெறும் என்பது பொதுவான கருத்து.

போராட்டங்கள்
இந்த முறையும் அப்படித்தான் அதிமுக தயாரானது.. ஆனால், 4 மாசத்தக்கு முன்பேயே டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தை கையில் எடுத்துவிட்டார்.. பல கட்ட போராட்டங்களையும் நடத்தினார்.. இடஒதுக்கீடு குறித்து நல்ல முடிவை சொல்லாமல், பாமகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்ற முடிவுக்கு அதிமுக அரசு வந்தது.

மீதி பாதியா?
இறுதியில் 20 சதவீத இடஒதுக்கீட்டில் பாதியை ஒதுக்கி தீர்மானம் போட்டது.. ஆனால், ஒரு சாதியினருக்கே 10.5 என்றால், மற்றவர்களுக்கு மீதி பாதியா? என்று பிற சமூகத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிருப்தி மக்களுக்கு உள்ள நிலையில், அதிமுக அரசுக்கு இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் மேலும் தலைக்கு மேல் அடியே விழுந்துள்ளது. பிற சமூகத்தினரின் கோபம், அதிருப்தியை எளிதாகவே அதிமுக பெற்றும் வருகிறது.

பாமக
இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் இதை பற்றி பேசியுள்ளார். திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது, "சட்டசபையில் முதல்வர் அறிவித்த 20% வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.. அது தாற்காலிகமானதுதான்.. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதனால் 6 மாத காலம் தற்காலிக மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அது 6 மாத காலம் மட்டுமே செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தற்காலிகம்
அமைச்சர் சொன்னதை கேட்டு, அப்படியே அதிர்ந்து போய் உள்ளது பாமக.. " டெம்ப்ரவரி" என்பதற்காக இந்த 6 மாசமாக போராட்டம் நடத்தினோம்? என்று நொந்து போயுள்ளது.. இந்த வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்துதான் வடமாவட்டங்களில் வாக்குகளை பாமகவினர் திரட்டி வந்து கொண்டிருக்கின்றனர்..இதை ஒரு சாதனையாகவே முன்வைத்து பேசியும் வருகின்றனர்.. அப்படி இருக்கும்போது, அமைச்சர் இப்படி பேசியது நிச்சயம் பாமக தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

சமாதானமா?
அமைச்சர் ஏன் இப்படி பேசினார்? அல்லது அது அவரது சொந்த கருத்தா? முதல்வரின் அனுமதியோடுதான் பேசினாரா? என்றெல்லாம் தெரியவில்லை.. அல்லது மற்ற சமூகத்தினரின் கோபத்தை தணித்து, வாக்குகளை அள்ள இப்படி பேசினாரா என்றும் உறுதியாக தெரியவில்லை.. ஆனால், இடஒதுக்கீடு தற்காலிகமானது, 6 மாதம்தான் செயல்படும் என்று அமைச்சர் சொல்லி உள்ளது, கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும் சூழலையே தந்துள்ளது.. பார்ப்போம்..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications