காயிதே மில்லத் 130வது பிறந்த நாள்! மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தும் அதிமுக!
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: ஜூன் 5, 2025 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 10 மணி
இடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதி.

காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் 5, 2025 அன்று காலை 10 மணிக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அ.இ.அ.தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications