கருணாநிதி, ஜெயலலிதா ஸ்டைல்.. விஜய் வந்தாலும் 45 தொகுதிகளே.. கறார் காட்டும் எடப்பாடி!
சென்னை: முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மூப்பனார் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை எப்படி சமாளித்து கூட்டணிக்குள் கொண்டு வந்து 41 தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுத்தாரோ, அதேபோல் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து 45 தொகுதிகளுக்குள் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. கரூர் விவகாரம் காரணமாக தவெகவுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினரின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஏனென்றால் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பின் தவெக தலைவர் விஜய் இதுவரை ஏன் வீட்டில் இருந்தே வெளியில் வராமல் இருக்கிறார் என்று தெரியாமல் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறார். சட்டசபையிலேயே விஜய்யின் குரலாக எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அதேபோல் தவெக தனித்து நின்றால் அது திமுகவுக்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதால், விஜய்யும் கூட்டணிக்காக கதவுகளை திறக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழலில், அதிமுகவின் கட்டமைப்பையும், அக்கட்சியின் வலிமையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விஜய்க்கு ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய, விஜய் வைக்கும் டிமாண்ட் மிகப்பெரிதாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 75 தொகுதிகள், துணை முதல்வர் பதவி ஆகியவற்றுக்கு விஜய் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றவே முடிவு எடுத்திருக்கிறார்.
ஏனென்றால் 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தற்போது விஜய்க்கு இருந்த ஆதரவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூப்பனாருக்கும் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் அவரை இணைத்ததோடு, 41 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்தது.
அப்போது விஜயகாந்த் உடன் கூட்டணி அமைக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டின. விஜயகாந்த் எந்த அணியில் இணைகிறாரோ, அந்த அணியே வெல்லும் என்று கூறப்பட்டது. இறுதியாக விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது விஜயகாந்துக்கு சுமார் 10 சதவிகித வாக்குகள் இருந்தன. இதனால் விஜய்யையும் அதே அளவிற்கான தொகுதிகளை கொடுத்து ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். இதன் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் தன்னுடைய தலைமையையும் எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கருதுவதாக தெரிகிறது.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி












Click it and Unblock the Notifications