Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி, ஜெயலலிதா ஸ்டைல்.. விஜய் வந்தாலும் 45 தொகுதிகளே.. கறார் காட்டும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மூப்பனார் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை எப்படி சமாளித்து கூட்டணிக்குள் கொண்டு வந்து 41 தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுத்தாரோ, அதேபோல் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து 45 தொகுதிகளுக்குள் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. கரூர் விவகாரம் காரணமாக தவெகவுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினரின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

AIADMK - TVK Alliance

ஏனென்றால் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பின் தவெக தலைவர் விஜய் இதுவரை ஏன் வீட்டில் இருந்தே வெளியில் வராமல் இருக்கிறார் என்று தெரியாமல் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறார். சட்டசபையிலேயே விஜய்யின் குரலாக எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அதேபோல் தவெக தனித்து நின்றால் அது திமுகவுக்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதால், விஜய்யும் கூட்டணிக்காக கதவுகளை திறக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழலில், அதிமுகவின் கட்டமைப்பையும், அக்கட்சியின் வலிமையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விஜய்க்கு ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய, விஜய் வைக்கும் டிமாண்ட் மிகப்பெரிதாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 75 தொகுதிகள், துணை முதல்வர் பதவி ஆகியவற்றுக்கு விஜய் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றவே முடிவு எடுத்திருக்கிறார்.

ஏனென்றால் 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தற்போது விஜய்க்கு இருந்த ஆதரவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூப்பனாருக்கும் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் அவரை இணைத்ததோடு, 41 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்தது.

அப்போது விஜயகாந்த் உடன் கூட்டணி அமைக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டின. விஜயகாந்த் எந்த அணியில் இணைகிறாரோ, அந்த அணியே வெல்லும் என்று கூறப்பட்டது. இறுதியாக விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது விஜயகாந்துக்கு சுமார் 10 சதவிகித வாக்குகள் இருந்தன. இதனால் விஜய்யையும் அதே அளவிற்கான தொகுதிகளை கொடுத்து ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். இதன் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் தன்னுடைய தலைமையையும் எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கருதுவதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+