அதிர்ந்த அரங்கம்! தலைவரானார் அன்புமணி! உற்சாகமான பாட்டாளிகள்! மேடையில் அரங்கேறிய சுவாரசிய நிகழ்வுகள்
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டாவது தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகனும் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்கட்சியினர் 15 நிமிடங்களுக்கும் மேலாக உற்சாக முழக்கமிட்டனர். கூட்டத்தில் சில முக்கிய மற்றும் சுவாரசிய நிகழ்வுகளை பார்க்கலாம்!
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி அதாவது சனிக்கிழமையான இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார்

அன்புமணி ராமதாஸ்
கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால் நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த தீரன், ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் 3வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

ஜிகே.மணி பேச்சு
சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜிகே.மணி, "தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்சியின் எதிர்கால நலன் கருதி மறுப்பு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கியமான தீர்மானத்தை வாசிக்க இருக்கிறேன். இதனை பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வது மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சி. இந்தக் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள் சாதனைகள் ஏராளம்.

அரசியல் சக்தி
அரசுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஆதரிக்கும் கட்சியாகவும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கும் கட்சியாகவும் இருந்திருக்கிறது. அரசுக்குப் பல ஆலோசனைகளை வழங்கிய கட்சியாகவும் பாமக உள்ளது. பல அரசியல் கட்சிகளை பயணத்தை தீர்மானிப்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பங்கு உள்ளது.கட்சியின் எதிர்கால நலன்கருதி கட்சிக்கு புதிய தலைமுறை கொண்டு வர வேண்டும் என நானே விரும்பினேன். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆன அன்புமணி ராமதாசிடம் தெரிவித்த போது இது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தலைவர் அன்புமணி
அதன்படி, இளம்வயதிலேயே மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக வரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசினார். அப்போது அரங்கில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் உற்சாக முழக்கம் இட்டனர். இதைடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் 2வது தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஜிகே மணி முன்மொழிந்த நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வழிமொழிந்தனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications