தமிழகத்திற்கு பறந்து வரும் "பட்டம்".. ஒவைசி கட்சிக்கு தனிச்சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு தேர்தல் ஆணையம் பட்டம் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.
2021 சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய காட்சிகள் பெரிய கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. அதிமுக - பாமக இடையே டீலிங் முடிந்த நிலையில் தற்போது அதிமுக, பாஜக, தேமுதிக இடையே ஆலோசனை நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் திமுகவும் காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. அதிமுக, திமுக போக தமிழகத்தில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கேம் சேஞ்சராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசி மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தேசிய அளவில் தற்போது கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து லோக்சபா எம்பியாக இவர் தற்போது உள்ளார். இவரின் ஏ.ஐ.எம்.ஐ.எம். நாடு முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக பீகார் சட்டசபை தேர்தலில் இவரின் கட்சி 5 இடங்களில் பெற்ற வெற்றி நாடு முழுக்க இவரை திரும்பி பார்க்க வைத்தது. இஸ்லாமியர்களின் வாக்கு இவருக்கு அதிகம் விழுவதால் மிக முக்கியமான கட்சியாக அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உருவெடுத்து வருகிறது.

வாக்குகள் பிரிப்பு
பீகார் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைய இவர் வாக்கை பிரித்ததுதான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட உள்ளது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.

பட்டம்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு தேர்தல் ஆணையம் பட்டம் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மேற்கு வங்கத்திலும் இதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உருது பேசும் இஸ்லாமியர்களின் ஆதரவு இவருக்கு உள்ளது.

வாய்ப்பு
இவர்களை வாக்குகளை ஒவைசி வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன் 2016 சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, வாணியம்பாடியில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போட்டியிட்டு தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி புதிய எழுச்சி பெற்று இருப்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.
-
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications