மக்களே உஷார்.. கொடுங்கையூரில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டீங்களா.. எப்படியெல்லாம் ஏமாற்றுராங்கப்பா
சென்னை: சென்னை கொடுங்கையூரில் கேபிள் டிவி ரிப்பேர் செய்ய வந்தவர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கேபிள் டிவி ரிப்பேர் செய்ய வந்துள்ளதாக கூறிய நபர்கள் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு கைவரிசையை காட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை, பணம் திருடியதாக மூதாட்டி தந்த புகாரில் 3 பேரை கைது செய்த போலீசார் நகை மற்றும் பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகரில் சாந்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சாந்தி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் உள்ள கேபிள் டிவி சில நாட்களாக பழுது ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் டிஷ் டிவி நிறுவனத்திற்கு சாந்தி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் டிசம்பர் மாதம் 25ம் தேதி கேபிள் டிவி பிரச்சனையை சரி செய்ய தனியார் டிஷ் டிவி நிறுவன ஊழியர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
மூதாட்டி சாந்தி வீட்டில்தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் ரிப்பேரை சரி செய்வதாக கூறி 3 முறை வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். வீட்டில் ரிப்பேர் செய்யும்போது சாந்தியின் கவனத்தை அவ்வப்போது திசை திருப்பி வீட்டில் கிடைத்தவற்றை சுருட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் கேபிள் டிவி ஊழியர்கள் வந்து சென்ற ஒரு வாரம் கழித்து சாந்தி பீரோவில் உள்ள பொருட்களை சரி பார்த்துள்ளார்.
அப்போதுதான் பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகைகள், 37 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார் சாந்தி. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். சாந்தியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர் மோகன், உடந்தையாக இருந்த தண்டையார் பேட்டை மாரிமுத்து, லட்சுமிபுரம் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து 4 சவரன் தங்கச் செயின் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications