Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணைவேந்தரின் விளக்கம் ஏற்புடையதல்ல.. பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் கடுகடுத்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துணைவேந்தர் அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. இதுபற்றி அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது.

முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில் 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் கூடாது எனக்கூறி போராடிய பெரியாரின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இத்தகைய செயல் நடந்துள்ளது வருத்தமளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஓ பன்னீர் செல்வம் கண்டனம்

ஓ பன்னீர் செல்வம் கண்டனம்

இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து பல்ககை்கழக துணைவேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல. எனவே தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.

 துணைவேந்தர் கூறியது என்ன?

துணைவேந்தர் கூறியது என்ன?

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், ‛‛முதுகலை வரலாறு 2 ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாவத்தாள் பிற பல்கலைக்கழ கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை'' என்றார்.

உயர்கல்வித்துறை நடவடிக்கை

உயர்கல்வித்துறை நடவடிக்கை

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த வினாத்தாள் விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை உயர் அலுவலரின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். அந்தக் குழு அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+