Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக அலுவலகம் சூறை..திருடு போனது என்ன? சி.வி. சண்முகத்திடம் சிபிசிஐடி போலீஸ் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசியதில் கலவரமாக மாறியது. இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

சி.வி. சண்முகம் புகார்

சி.வி. சண்முகம் புகார்

இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் சிலவை திருடப்பட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அலுவலக மோதல் வழக்கு

அலுவலக மோதல் வழக்கு

இந்த வழக்கு விசாரணையின்போது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

ஹைகோர்ட்டில் கூடுதல் மனு

இதைத்தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் விசாரணையை தொடங்கவில்லை.பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கோரியிருந்தார்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

 அலுவலக மேலாளர் விளக்கம்

அலுவலக மேலாளர் விளக்கம்

இந்த விசாரணையைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரான மகாலிங்கத்திற்கு விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்கு ஆஜரானார். சிபிசிஐடி காவல்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பல்வேறு கேள்விகளை மகாலிங்கத்திடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.

சி.வி. சண்முகம் வாக்குமூலம்

சி.வி. சண்முகம் வாக்குமூலம்

ஏற்கனவே, புகார் மீதான விசரணையை சி.வி.சண்முகம் அவர்களிடம் நடத்தினர். தற்போது மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து, சி.வி.சண்முகத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+