Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாது மணல் முறைகேடு.. விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் வீட்டில் இருந்த பீரோ.. ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாக சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 8க்கும் அதிகமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் குவாரிகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், வைகுண்டராஜனின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தாது மணல் முறைகேடு

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தாது மணல் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில். அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. அந்த சோதனைகளில் தாது மணம் முறைகேடு பெரியளவு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Minerals Smuggling CBI Raid

சிபிஐ விசாரணை

இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாட, இதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடபு உள்ளது என்பது குறித்து விரிவாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.

சென்னையில் சிபிஐ சோதனை

இந்த நிலையில் தாது மணல் முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள 3 இடங்களிலும், நெல்லையில் 8 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாது மணல் முறைகேடாக எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அலுவலகம், அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் ஹரி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

5 மணி நேரமாக ரெய்டு

அதேபோல் ஆல்பர்ட் தியேட்டர் அருகே ஜெகதீசன் என்பவர் அலுவலகம் மற்றும் சுகுமார் என்பவரின் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 5க்கும் அதிகமான இடங்களில் தாது மணம் முறைகேடு தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

வைகுண்டராஜன் வீட்டில் ரெய்டு

குறிப்பாக தாது மணல் முறைகேடு தொடர்பாக விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் குறி வைத்து இந்த சோதனை நடப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் வைகுண்டராஜனின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளி வந்துள்ளது.

பீரோ நிறைய ஆவணங்கள் பறிமுதல்

விவி மினரல்ஸ் தொடர்புடைய இடங்களில் செய்யப்பட்ட இடங்களில் கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள் உள்ள ஒரு பீரோவை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிபிஐ சோதனை முடிவில், கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+