ஜிஎஸ்டி சாலையில் முதலை?? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சென்னை: செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழு கனமழை பெய்து வருகிறது.
கடந்த அக். 26ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தலைநகர் சென்னை
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முதலில் நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததது. பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ள நீரை முழுமையாக வெளியேற்றி, இதில் இருந்து மீண்டு வரவே சில நாட்கள் வரை ஆனது.

1000 மி.மீ மழை
தலைநகர் சென்னையில் இந்த மாதம் மட்டும் 1000 மி.மீ மழை பதிவானதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இதற்கு முன் 1918 நவம்பர் (1088 மிமீ), 2005 அக்டோபர் (1078 மிமீ), 2015 நவம்பர் (1049 மிமீ), ஆகிய ஆண்டுகளில்ல மட்டுமே 1000 மி.மீ மழை பதிவானது.

முதல்வர் ஆய்வு
இந்தச் சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

ஜிஎஸ்டி சாலையில் முதலை?
மேலும், ததைலநகர் சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வெள்ளம் போல பாய்கிறது. இந்தச் சூழலில் செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் பகிரப்பட்டது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்நிலையில் முதலை பரவியதாக வெளியான தகவல் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் (ஜிஎஸ்டி சாலை) வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாகச் சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் "ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்து சென்றுள்ளது. அதைத் தான் முதலை எனச் சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்" என்றார்.
-
இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம் -
குதிரையில் யார் பாருங்க.. பெட்ரோல் பங்க் கூட்டத்தால் ஷாக்கான வங்கி ஊழியர்! என்ன கோபால் இது? -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications