கொரோனாவுக்கு சிகிச்சை- வியாசர்பாடியில் மேலும் ஒரு சித்த மருத்துவமனை - சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஒரு சித்த மருத்துவமனையை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை விவரம்:

முழு வீச்சில் முகாம்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் பெருநகர மாநகராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் நடத்தப்படும் பரிசோதனை மையங்கள் மற்றும் ஆய்வுப் பணிகள் மூலம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சாலிகிராமம் சித்த மருத்துவ மையம்
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கான பராமரிப்பு மையங்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய சித்த மருத்துவ முறைப்படியும் சிகிச்சை அளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 படுக்கை வசதிகளுடன் சாலிகிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் கொரோனா தொற்று நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.

வியாசர்பாடியில் 2-வது சித்த மருத்துவமனை
வியாசர்பாடியில் இரண்டாவது சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திறந்து வைத்தார். தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் என்ன வசதிகள்
இங்கு மொத்தம் 224 படுக்கை வசதி ஏற்படுத்த பட்டுள்ளதாகவும், 10 சித்த மருத்துவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதல் நாள், 7வது, 14வது நாள் என அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உணவு மற்றும் சிகிச்சை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது என்றார். யாசர்பாடியில் அமைந்துள்ள சித்த மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, கபசுர குடிநீர், மூலிகை தேனீர், மூலிகை ஆவிப் பிடித்தல்,மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை தினமும் வழங்கப்பட உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications