Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி ஈஸி.. சென்னை மெட்ரோவில் மாணவர்கள்-ஐடி ஊழியர்கள் எளிதாக பயணிக்க பஸ்கள் இயக்கம்.. புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மாணவர்கள், ஐடி ஊழியர்கள் எளிதாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காரணம் வகையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக பிற இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

தற்போதைய சூழலில் சென்னையில் முதல் வழித்தடத்தில் விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் 2.20 லட்சம் பேர் பயணம்

தினமும் 2.20 லட்சம் பேர் பயணம்

இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு எஸ்டேட், கிண்டி, லிட்டில் மவுண்ட், ஷெனாய் நகர், ஆலந்தூர், திருவொற்றியூர், கோயம்பேடு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட நிலையங்களை இணைக்கும் வகையில் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் சென்னையில் வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

 புதிய திட்டம்

புதிய திட்டம்

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பிற இடங்களுடன் நேரடியாக இணைக்க வேண்டி உள்ளது. இதற்காக பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் இயக்குவது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. '' என்றார்.

 அதிகாரி கூறுவது என்ன?

அதிகாரி கூறுவது என்ன?

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பிற இடங்களுடன் நேரிடையாக இணைக்க வேண்டி உள்ளது. இதற்காக பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் இயக்குவது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. '' என்றார்.

வருமா சேர் கார் வசதி?

வருமா சேர் கார் வசதி?

இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் சேவையின் துவக்கத்தில் சேர் கார்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் குறைந்த செலவில் மெட்ரோ ரயில் பயணிகள் குறைந்த விலையில் வேகமாக பயணம் செய்தனர். தற்போது இது செயல்பாட்டில் இல்லை. இதனால் அந்த சேவையையும் நடைமுறைக்கு கொண்டு வர பிற நிறுவனங்களுடன் பேச வேண்டும் என மெட்ரோ பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+