சென்னை புறநகர் + காஞ்சிபுரம்.. திடீர்னு போன உத்தரவால் "தள்ளாடும்" மதுக்கடைகள்.. டாஸ்மாக் போட்ட போடு
சென்னை: மதுக்கடைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம், முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இது குடிமகன்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, பல்வேறு கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தபடியே உள்ளது.

புகார்கள்: இதனை தடுப்பதற்காக, டாஸ்மாக் நிர்வாகமும் பலமுறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில்கூட ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் சில அறிவுறுத்தல்களையும் குறிப்பிட்டிருந்தது.
"சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்ய வேண்டும் .. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.. அவ்வாறு விற்பனை செய்தால் பணியாளர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கடையின் வேலை நேரத்தில் பணியில் இல்லாத பணியாளர்கள் குறித்து மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்படும்" என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
மதுபானங்கள்: ஆனாலும், அதிக விலைக்கு மது விற்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது..
அதனால்தான், இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம், மதுக்கடைகளுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை கடுமையாக விடுத்துள்ளது.. இது தொடர்பாக சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்திருக்கிறது.
அதில் உள்ளதாவது: "காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும்.
சஸ்பெண்ட்: மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள்மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications