ஈரோடு மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு மக்களின் 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் கல்வி களஞ்சியமாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும் என மாவட்ட மக்கள் சுமார் இருபது ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஈரோடு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஆர்வலர்கள் கூட்டு முயற்சியால் 1954ஆம் ஆண்டு ஈரோடு சத்தி சாலையில் உள்ள சூழலில் மகாஜனக்கல்லூரி என்ற பெயரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது பின்னர் சிக்கய்ய நாயக்கர் மகாஜனக் கல்லூரி என்றும் , சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாறியது.

ஈரோட்டில் பெரிய கல்லூரி

ஈரோட்டில் பெரிய கல்லூரி

52 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பெரியார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த கல்லூரி கோவை மண்டல கல்லூரிக் கல்வி துணை இயக்குனர் பாதுகாவலராக கொண்டு இயங்கி வருகிறது கடந்த 60 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிய இந்தக் கல்லூரி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் என பலரை உருவாக்கி உள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரி

அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரி

இந்தக் கல்லூரியின் நிர்வாகிகள் கல்லூரிக்கான அனுமதியை உயர்கல்வித் துறையும் புதுப்பிக்க தவறியதாலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டதால் 2002ஆம் ஆண்டு முதல் தனியார் ஒழுங்காற்று சட்டத்தின்படி கல்லூரி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கல்லூரியில் 11 இளங்கலை படிப்புகளும் மூன்று மொழிகளை படிப்புகளும் உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

20 ஆண்டுகால கோரிக்கை

20 ஆண்டுகால கோரிக்கை

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படுவது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஈரோடு மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி இல்லாத நிலையில் இந்த கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 20 ஆண்டுகளாக இந்த மக்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.

Recommended Video

    ஈசிஆர் ரோட்டில் முதல்வர் சைக்கிள் பயணம்! ஆன்லைன் வகுப்பு புரியுதாப்பா? மாணவரிடம் கேட்ட ஸ்டாலின்
    சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

    சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

    ஈரோடு மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 104 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற அறுபத்தி ஆறு திட்டப் பணிகளுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முடிவற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் முடிவடைந்தவுடன் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவேன் என கூறினார் மேலும் ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையாக , ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயின்று வரும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+