பக்தர்களுக்கு குட் நியூஸ்.. புதிதாக 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 754 கோவில்களில் மதியவேளைக்கான அன்னதான திட்டம் அமலில் உள்ள நிலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 5 கோவில்களில் அமலில் உள்ள நிலையில் தற்போது புதிதாக 3 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 கோவிலுக்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தற்போது பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் வசதிக்காக கோவில்களில் அன்னதானம் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

நாள் முழுவதும் அன்னதானம் திட்டம்
இந்நிலையில் தான் அரசு கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தமிழகத்தில் தற்போது 754 கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த புதிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இந்த திட்டம் 2 கோவில்களில் அமல்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து விரிவாக்கப்படும் திட்டம்
அதன்பிறகு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 5 கோவில்களில் புதிதாக தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

3 கோவில்களில் புதிதாக தொடக்கம்
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது மேலும் 3 கோவில்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலாகி உள்ளது. இதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

காலை 8 முதல் இரவு 10 மணி வரை
இந்த திட்டத்தின் மூலம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மேலும் 3 கோவில்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். இந்த கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்பு சான்றிதழ் அனைத்து முதுநிலை கோவில்கள் உள்பட 314 கோவில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications