குவியும் நோயாளிகள்... பரபரக்கும் மருத்துவமனைகள்.. பணிச்சுமையால் பரிதவிக்கும் செவிலியர்கள்..!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பராமரிக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

10 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 செவிலியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும், கொரோனா முதல் அலையின் போது வழங்கப்பட்ட எந்த சலுகைகளும் இப்போது வழங்கப்படுவதில்லை என்பதும் அவர்களது புகாராக உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மூத்த செவிலியர் ஒருவர், நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகிறார்.
கொரோனாவின் தொடக்க காலத்தில் இரவு ஷிப்ட் இரண்டாக பிரிக்கப்பட்டு மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஒரு குழுவும் மீண்டும் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை மற்றொரு குழுவும் இரண்டு பேட்ஜ்களாக பிரித்து பணியமர்த்தப்பட்டதாகவும், ஆனால் இப்போதோ செவிலியர் ஒருவர் 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், கொரோனா வார்டுகளில் கடந்தாண்டை விட இப்போது அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பராமரிக்கும் பொறுப்பு என்பது மிகப்பெரியது. எங்களது நிலையை அறிந்து இப்போது தான் சில தன்னார்வலர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள். எங்களுக்கு உணவு, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளையும் அவர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.
இதனால் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை எந்த தாமதமுமின்றி அரசு நிரப்ப முன்வந்தால் மட்டுமே தங்கள் பணிச்சுமை ஓரளவாவது குறையக் கூடும் என்கிறார் அந்த மூத்த செவிலியர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications