அதிரடி மாற்றம்.. கொரோனா டெஸ்ட் செய்தாலே இனி 14 நாட்கள் தனிமை கட்டாயம்.. சென்னையில் புது ரூல்!
சென்னை: சென்னையில் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகரட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து இருக்கிறது.சென்னையில் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27398 ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது.
தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது.

விதிமுறை என்ன
இந்த நிலையில் சென்னையில் கொரோனா சோதனை செய்வதற்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரிசோதனை தனிமை
பொதுவாக ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். இந்த நிலையில் இனிமேல் சென்னையில் ஒருவர் கொரோனா சோதனை மையத்திற்கு சோதனை செய்து கொண்டாலே அவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகரட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை மட்டும் இப்படி
சென்னையில் மட்டும்தான் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இப்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா சோதனை மையங்களுக்கு வரும் நபர்களுக்கு கொரோனா இல்லை என்றாலும் கூட அதே சோதனை மையம் வரும் வேறு சில நபர்கள் மூலம் அவர்களுக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் நிலை என்ன
சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். லாக் டவுன் விதிமுறைகள் தீவிரமாக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் சென்னையில் கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications