தமிழ்நாடு கொரோனா: சென்னை, கோவையில் பாதிப்பு சற்று அதிகரிப்பு.. ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நேற்றை விட உயர்ந்துள்ளது.

தொடர்ந்து குறையும் கொரோனா

தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 900-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,11,584 உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு அதிகரிப்பு

உயிரிழப்பு அதிகரிப்பு

கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு இரண்டு பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,247 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 931 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,65,178 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

 சென்னை முதலிடம்

சென்னை முதலிடம்

10,159 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,00,833 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,13,10,244 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 127 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் மீண்டும் சதம்

கோவையில் மீண்டும் சதம்

கோவையில் 101 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா 100-க்கு கீழே குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 78 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 18 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 15 பேருக்கும், திருவள்ளூரில் 29 பேருக்கும், திருச்சியில் 38 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 52 பேருக்கும், ஈரோட்டில் 66 பேருக்கும், சேலத்தில் 47 பேருக்கும், நாமக்கல்லில் 42 பேருக்கும், தஞ்சாவூரில் 27 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில், கோவையில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+