மத்திய அரசை கண்டித்து செப். 20ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: ஸ்டாலின் போட்ட அதிரடி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து செப். 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அவரவர் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட கூட்டணி தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

DMK alliance parties announced to hold a protest on september 20th against bjp govt

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், "மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாவு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு பொருளாதார சீழிவு, தனியார்மயமாக்கம், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு" உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஒன்றிய பாஜக, அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி எந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்த அறிவிப்பில் அதிரடி காட்டும் முதல்வர் Stalin.. திகைத்து நிற்கும் எதிர்க்கட்சிகள்

    தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+