மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக
சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சகட்டமாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மரணித்தும் வருகின்றனர். இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதையடுத்து சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
உச்சநீதிமன்றமும், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, ஆர்.எஸ். பாரதி பங்கேற்றனர்.
அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்கலாம். அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை வேறு எந்த பணிகளையும் செய்யவும் அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மக்களுடன் கலந்து பேசி தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தியை செய்யலாம் எனவும் இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
Recommended Video
இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை முன்னிட்டும் திறக்கவே கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன்பாக 100க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications