திமுகவுக்கு '190' இடங்கள்.. பெரும்பான்மை ஆட்சி - P-MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்.29) வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், திமுக ஆட்சியைக் கைப்பற்றும் P-MARQ கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், குறைவாகவே இருந்தது.

திமுக அலை
இந்த நிலையில், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே உள்ளன. இது திமுக தலைமையை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அச்சுறுத்திய கமல்
குறிப்பாக, இம்முறை ஐந்து முனை போட்டி நிலவியதால், திமுக தலைமை சற்று பீதியில் இருந்தது. எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்குமா என்ற கலக்கம் இருந்தது. கமல்ஹாசனின் வருகை, நாம் தமிழர் கட்சியின் எழுச்சி, அமமுக-வின் சைலன்ட் மிரட்டல் போன்றவை திமுகவை சற்று கவலையில் வைத்திருந்தன. ஏனெனில், இவர்கள் அனைவரும் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிக்க மாட்டார்கள் என்றாலும், வாக்குகளை கணிசமாக பிரிப்பவர்கள்.

வெற்றி பாதிக்குமா?
கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில் வாக்குகள் இருப்பதால், சென்னையில் மக்கள் நீதி மய்யம் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் வாக்குகளை பிரிக்க காத்திருக்க, கிராமப்புறங்களில் சீமான் வெயிட்டாக இருந்தார். இவர்கள் பல திமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கக் கூடும் என்றும் கருதப்பட்டது.

கமலுக்கு பூஜ்யமா?
இந்த நிலையில், P-MARQ வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக 165- 190 இடங்கள் வரை வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், அதிமுக 58 - 68 இடங்களிலும், அமமுக 4 - 6 இடங்களிலும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 'பூஜ்யம்' கொடுத்துள்ள P-MARQ, மற்றவர்கள் 0 -2 இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications