அப்படியா..தெரியாதே..நன்றி..இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு..உதயநிதி ஸ்டாலின் ரியாக்சன்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின்..அதற்கு நன்றி தெரிவித்ததோடு தனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்தார்.
திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு அணிக்கு செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

உதயநிதி ரியாக்சன்
இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கூறி வாழ்த்து கூறினர். அதைக்கேட்ட உதயநிதி ஸ்டாலின்..அப்படியா எனக்கு தெரியாதே என்று ஆச்சரியத்துடன் கேட்டதோடு நன்றி நன்றி.. என்று கூறினார்.

மிகப்பெரிய பொறுப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

திமுக நிர்வாகிகள் வாழ்த்து
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications