தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. பழைய ரேட் vs புது கட்டணம்.. வித்தியாசம் எவ்வளவு? முழு விவரம் இதோ
சென்னை: தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் யாருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு 2026- 27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது.
பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

எத்தனை யூனிட்டுகள்
இந்த புதிய நடைமுறையின்படி எத்தனை யூனிட்டுகளுக்கு என்னென்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதில் மாற்றமில்லை. வாடிக்கையாளர்கள் இந்த இலவச சலுகை வேண்டாம் என விருப்பப்பட்டால் மின்சார வாரியத்திற்கு எழுதி கொடுக்கலாம்.

200 யூனிட்டுகள்
200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதத்திற்கு ரூ 27.50 என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும். அதாவது 200 யூனிட் வரை பழைய கட்டணமாக 170 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 55 சேர்த்து ரூ 225 ஆக செலுத்த வேண்டும்.

300 யூனிட்டுகள்
அது போல் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ 145 கூடுதலாக வசூலிக்கப்படும். அதாவது 300 யூனிட் வரை பழைய கட்டணமாக 530 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 145 சேர்த்து ரூ 675 ஆக செலுத்த வேண்டும்.

400 யூனிட்டுகள்
400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 295 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 400 யூனிட் வரை பழைய கட்டணமாக 830 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 295 ரூபாய் சேர்த்து ரூ 1125 ஆக செலுத்த வேண்டும்.

500 யூனிட்டுகள்
500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 595 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 500 யூனிட் வரை பழைய கட்டணமாக 1130 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 595 ரூபாய் சேர்த்து ரூ 1725 ஆக செலுத்த வேண்டும்.

600 யூனிட்டுகள்
600 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 310 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 600 யூனிட் வரை பழைய கட்டணமாக 2446 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 310 ரூபாய் சேர்த்து ரூ 2756 ஆக செலுத்த வேண்டும்.

700 யூனிட்டுகள்
700 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 550 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 700 யூனிட் வரை பழைய கட்டணமாக 3110 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 550 ரூபாய் சேர்த்து ரூ 3660 ஆக செலுத்த வேண்டும்.

800 யூனிட்டுகள்
800 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 790 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 800 யூனிட் வரை பழைய கட்டணமாக 3760 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 790 ரூபாய் சேர்த்து ரூ 4550 ஆக செலுத்த வேண்டும்.

900 யூனிட்டுகள்
900 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 1130 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 900 யூனிட் வரை பழைய கட்டணமாக 4420 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 1130 ரூபாய் சேர்த்து ரூ 5550 ஆக செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications