சென்னை ஐகோர்ட் நீதிபதியின் டிரைவர் வீட்டின் படுக்கையில் இருந்த காட்சி.. ஆடிப்போன உறவினர்கள்
சென்னை: சென்னை மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர், பெற்றோரின் திருமண நாளையொட்டி கேக் வெட்டினார். பின்னர் படுக்கை அறைக்குள் சென்ற சதீஷ்குமார் திரும்ப வரவே இல்லை.. அவரது கோலத்தை பார்த்து உறவினர்கள் ஆடிப்போனார்கள்..
குடும்ப விவகாரங்களில் கணவன் மனைவி இடையே ஏற்படும் புரிதல் சரியாக இல்லாமல்போனால் வாழ்க்கையில் இருவருக்குமே சிக்கல் அதிகமாகிவிடுகிறது. கணவனை பற்றி சரியான புரிதல் இல்லாமல் மனைவி எடுக்கும் சில முடிவுகளும் சரி, மனைவியை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கணவன் எடுக்கும் முடிவுகளும் சரி, அவர்கள் வாழ்க்கையை மொத்தமாக கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவன் மனைவி சண்டை போட்டு, ஈகோவால் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். ஈகோ ஒருபுறம் எனில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் இருக்கிறார்கள். நான் ஏன் உனக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று கணவன் நினைத்தாலோ அல்லது மனைவி நினைத்தாலோ குடும்ப உறவுகள் சிதைத்து போகிறது. இதன் காரணமாக யாராவது ஒருவர் திடீரென தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் சென்னையின் புறநகர் பகுதியில் நடந்துள்ளது.
சென்னை மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் கக்கன்ஜி தெருவை சேர்ந்த 34 வயதாகும் சதீஷ்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தனது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். பின்னர் அறைக்குள் சென்ற சதீஷ்குமார், தூக்கிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவர் சதீஷ்குமாருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சதீஷ்குமார் தம்பதிக்கு குழந்தை பிறந்ததால் பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சதீஷ்குமார், பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று, இரவு வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு அது குறித்து தனது மனைவிக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அதன்பிறகே அவர் உயிரைவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications