கழுதை மேய்த்தால் ரூ.50 லட்சம்.. மத்திய அரசு தரும் மானியம்.. ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
சென்னை: என்னங்க சொல்றீங்க.. கழுதை வளர்த்தால் ரூ.50 லட்சம் கிடைக்குதா.. அதுவும் மத்திய அரசு அள்ளித்தருகிறதா... 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா... கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்று 90ஸ் கிட்ஸ்களை அப்பாக்கள் மற்றும் வாத்தியார்கள் திட்டியிருப்பார்கள். அவர்கள் வாய் முகூர்த்தத்தில் யாராவது கழுதைகளை மேய்த்து கொண்டிருந்தால், அதாவது பண்ணையாக வைத்து பராமரித்துக் கொண்டிருந்தால், இந்நேரம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அலுவலகங்களில் பல கழுதைகளை மேய்க்கிறேன் என்று கூறும் மேனேஜர்களை விடவும் சம்பாதிக்க முடியும் என்பது எதார்த்தமான உண்மை.
கழுதை வளர்த்தால் ரூ.50 லட்சம் என்பது எந்த அளவிற்கு உண்மை. எதற்காக 50 லட்சத்தை தூக்கி அரசு தர வேண்டும்.. அதற்கான பதிலை பார்ப்போம். இந்தியாவின் கழுதைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை குறைந்திருக்கிறது. எனவே கழுதைகளை அழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இந்தத் திட்டத்தில் கழுதைகளை இணைத்திருக்கறிது.

மத்திய அரசின் "தேசிய கால்நடை மிஷன்" திட்டத்தின் கீழ், கழுதைகள் வளர்ப்பை ஒரு தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ரூ.50 லட்சம் மானியம் கிடைக்குமா? என்றால்.. நிச்சயம் கிடைக்கும். கழுதை இனப்பெருக்க பண்ணை அமைக்க ஆகும் மொத்த செலவில் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.50 லட்சம் என்று மத்திய அரசு வரையறை வைத்தள்ளது.
யாரெல்லாம் கழுதை பண்ணை வைக்க மானியம் பெறலாம் என்றால், யார் வேண்டுமானாலும் வைக்க முடியும். தனிநபர்கள், சுயஉதவி குழுக்கள் , விவசாய உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எல்லாம் சரி, ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா? அவ்வளவு வருமானம் வருகிறதா.. ஐடியில் வேலை செய்பவர்களே 2 லட்சம் சம்பாதிக்க முடியவில்லை.. எப்படி சாத்தியம் என்கிறீர்களா.. கழுதைப்பால் விற்பனையில் தான் இப்படி சம்பாதிக்க முடியும். சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. இந்த கழுதைப்பால் அழகுசாதனப் பொருட்கள் , சோப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக இதற்கு மிகப்பெரிய தேவை உள்ளது.
ஒரு பண்ணையை முறையாக நிர்வகித்து, பாலை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்கிறார்கள்.
50 லட்சம் மானியம், 2 லட்சம் சம்பாத்தியம் கிடைக்குதே, நாளைக்கே ஆரம்பிக்கலாம்என்று நினைக்கிறீர்களா. அதற்கு நிபந்தனை வைத்துள்ளது மத்திய அரசு . கழுதை வளர்க்க விரும்புவோரின் பண்ணையில் குறைந்தது 50 பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகள் இருக்க வேண்டும். இதற்கு முதலில் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டும். அதன் பிறகே மானியத் தொகை விடுவிக்கப்படும்.
இந்த 50 லட்சம் மானியத் திட்டம் நாட்டு இனக் கழுதைகளை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த 50 லட்சம் மானியம் என்பது அரசு இலவசமாக வழங்கும் பணம் அல்ல; இது ஒரு தொழில் முனைவோர் திட்டம் ஆகும். அதாவது, நீங்கள் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், அரசு பாதியை ஏற்கும்.. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், ஓரளவு வட்டி இல்லாத கடன் போல் உங்களுக்கு கழுதை பண்ணை வைக்க அரசு உதவி செய்யும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications