உச்சநீதிமன்றம் செம்ம குட்டு- 7 தமிழரை விடுவிக்க உடனே கையெழுத்து போடுங்க- ஆளுருக்கு ராமதாஸ் அட்வைஸ்
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிவிட்ட நிலையில் இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை உடனே விடுதலை செய்யும் கோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

மத்திய அரசு நிலைப்பாடு
மேலும் நாடு விடுதலை அடைந்த பின்னர் முதல் முறையாக குற்றவியல் சட்டப் பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருவதையும் பேரறிவாளன் தரப்பு சுட்டிக்காட்டியது. மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் இனி 302-வது பிரிவின் கீழ் தண்டனை பெறும் அனைவரையும் விடுதலை செய்யும் முடிவு மத்திய அரசு சென்றுவிடும்; இது மோசமான நிர்வாக சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

விளாசிய நீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும், மாநில அமைச்சரவை முடிவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? என்றெல்லாம் சராமரியாக கேள்வி கேட்கப்பட்டன. மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாக சீர்குலைப்பதாக சாடினர் நீதிபதிகள்.

ராமதாஸ் ட்வீட்
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுனர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும்.

விடுதலை கோப்பில் கையெழுத்திடுக
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுனர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்!. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications