Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரவுடிகள் டூர் போற மாதிரி சுத்துறாங்க! எல்லா துறைகளிலும் லஞ்சம்! ஓராண்டு ஆட்சியை விமர்சித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது எனவும், ஊழல் இல்லாத துறை இல்லை, அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் காவல்நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் மரணம் அடைந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் புகார் எழுந்தது.

இளைஞர் விக்னேஷின் மரணத்துக்கு பல தரப்பிலிருந்து நீதி கேட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்திலும் இவ்விவகாரம் எதிரொலித்தது.

சட்டசபையில் இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறிய நிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு

வெளிநடப்புக்குப் பிறகு கோட்டை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விக்னேஷ் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை நடத்தினால், நேர்மையாக நியாயமாக இருக்கும். இந்த மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளாக பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது. இது ஆன்மிக நிகழ்ச்சி. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நடந்து வருகிறது.

தருமபுரம் ஆதீனம் விவகாரம்

தருமபுரம் ஆதீனம் விவகாரம்

அங்கே தங்கியிருந்து பல்லக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. இதற்கு தடை செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்க தக்கது. ஆன்மிகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று கொள்ள முடியாது.

தீபாவளி வாழ்த்து

தீபாவளி வாழ்த்து

முதல்வர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும், மதத்தையும் சாராதவர். பல்வேறு மதங்களை சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. முதல்வர் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். மக்களின் விருப்பமும் கூட.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரவுடிகள் சுற்றுலா செல்வது போல உலா வருகின்றனர். போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன. கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திறமையற்ற அரசு என ஓராண்டில் நிரூபணம் ஆகியுள்ளது" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+