Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’அக்டோபர் 17’ ஓபிஎஸ்க்கு அடுத்த ஷாக் கொடுக்க எடப்பாடி போடும் பக்கா ப்ளான்! களமிறங்கிய மாஜிக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஓரம் கட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்னும் சில நாட்களுக்குள் அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய மூத்த முன்னாள் அமைச்சர்களை களமிறக்கி உள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சில மாதங்களில் தேர்தலை சந்தித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்கான தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை விரைவில் நடத்துவார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வகுக்கப்பட்டிருக்கிறது

நிரந்தர பொதுச்செயலாளர்

நிரந்தர பொதுச்செயலாளர்

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்படுவதற்கான தேர்தலை விரைவில் நடத்தி பொறுப்பேற்கவும் திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை களமிறக்கியுள்ளா. தேர்தல் நடத்துவதற்காக ஆணையர்களாக ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் தேர்தல்

விரைவில் தேர்தல்

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்பி சிவி சண்முகம் ஆகியோர் தேர்தலை நடத்தி முடிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு களப் பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தது போல் எடப்பாடி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி வெற்றி பெறுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மாஜிக்கள் தீவிரம்

மாஜிக்கள் தீவிரம்

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அடுத்த நான்கு மாதங்களில் அதாவது அப்போதைய தேதி அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அதிமுகவின் பொது செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அதற்காக இன்னும் 20 நாட்களை இருக்கும் நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

பல திட்டங்கள்

பல திட்டங்கள்

தேர்தலை நடத்தி முடித்த கையோடு அடுத்தடுத்து பல அதிரடி முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக நடத்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார். இதை எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களிடம் இதற்கான ஏற்பாடுகளை தற்போது இருந்தே செய்ய வேண்டும் எனவும் பொது செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+