நம்மளும் போவோமா? தலையை குனியும் ‘இரட்டை இலை’! மீண்டும் ‘கூவத்தூர்’ பார்முலா? கையிலெடுக்கும் இபிஎஸ்!
சென்னை : ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாகிகள் மட்டுமல்லாது தற்போது எம்எல்ஏ ஒருவரும் தாவி இருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தற்போது இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர்களை மீண்டும் ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தாலும் ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாகிகள் தாவுவது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே திண்டுக்கல், சேலம்,ராமநாதபுரம், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நேற்று நடந்தது.

அதிமுக விவகாரம்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி .பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு அதிகரித்து வருவதால் குழப்பம் அடைந்துள்ளது இபிஎஸ் தரப்பு. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதன் பின்னணியில் என்ன நடந்தது. பக்யராஜ் திடீர் ஆதரவுக்கு என்ன காரணம் என யோசிப்பதற்குள் சென்னை நட்சத்திர விடுதியில் சந்தித்த பாக்யராஜ் அப்போது தனது ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்தார்.

உசிலம்பட்டி எம்எல்ஏ
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் வந்து சந்தித்தார். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் இருந்தனர். ஐயப்பனுடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், அதிமுக வழக்கறிஞர்கள் சிலரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஐயப்பன், மதுரை மாவட்ட உசிலம்பட்டியை சேர்ந்தவர். இவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதரவாளர் என்பது குறுப்பிடத்தக்கது.

கடும் அதிருப்தி
இதுவரை எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறி உள்ளது எடப்பாடி அணியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் மேலும் பலர் தன்னுடன் வர இருக்கிறார்கள் ஆனால் அது பரம ரகசியம் என கூறினார். இதனால் மேலும் பலர் அவருடன் வருவார்கள் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதுவரை நிர்வாகிகள் சென்று வந்த நிலையில் தற்போது முதன் முறையாக எடப்பாடி தரப்பிலிருந்து எம்எல்ஏ ஒருவர் தாவி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

கூவத்தூர் பார்முலா
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என தெரியாது. ஆனால் அதற்குள் எம்எல்ஏக்கள் தாவினால் அது ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காக திட்டம் ஒன்றை கையில் வைத்திருக்கிறார் இபிஎஸ். அதுதான் கூவத்தூர் ஃபார்முலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கு இந்த கூவத்தூர் ஃபார்முலா தான் கை கொடுத்தது. தற்போது தனது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பதவியை கைப்பற்றுவதற்காக மீண்டும் கூவத்தூர் பார்முலாவை கையில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி











Click it and Unblock the Notifications