206-வது முறையாக தேர்தலில் போட்டி...! அசராத தேர்தல் மன்னன் பத்மராஜன்
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் மன்னன் பத்மராஜன் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரக்காவல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மராஜன், வாஜ்பாய், மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி என பல தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர். குடியரசுத்தலைவர் தேர்தலில் அப்துல்கலாம், பிரனாப்முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டவர்.

தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது அளிக்கப்படும் டெபாசிட் தொகைக்காக மட்டும் தனது சொந்தப்பணம் ரூ.32 லட்சத்தை செலவழித்துள்ளார். அதற்காக இவர் பெரிய செல்வந்தர் என்றெல்லாம் எண்ண வேண்டாம், நடுத்தர வாசிதான். இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அவர் அதற்கான வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியான நடேசனிடம் நேற்று வழங்கினார்.
206-வது முறையாக நாங்குநேரியில் போட்டியிடுவதாக கூறும் அவர், தனது நோக்கம் வெற்றிபெறுவது அல்ல என்றும், கின்னஸில் இடம்பிடிப்பதே தமது லட்சியம் எனவும் தெரிவிக்கிறார். ஏற்கனவே லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டதாக கூறும் அவர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக்கொள்வேன் எனக் கூறுகிறார்.
இந்தியாவிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சாதனைக்கு சொந்தக்காரர் இந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications