செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! கரூரில் பரபரப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள், கரூரில் சங்கர் ஆனந்த் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களான கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்த் மெஸ் கார்த்திக் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் சுப்பிரமணி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாகி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications