தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள்..சோழிங்கநல்லூர் தொகுதி டாப்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அந்த வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அவா்களின் பெயர் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு விண்ணப்பமும் வெளியிடப்பட்டது.

தீவிரமான பணிகள்
தொடர்ந்து, டிசம்பர் 8 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயா் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்தப் பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள்
அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.82 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனியும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மாநிலங்களை தங்களுக்கு கீழாக மத்திய அரசு கருதக்கூடாது! உச்சநீதிமன்ற நீதிபதி மிக தெளிவாக சொன்ன கருத்து -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications