அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆன சசிகலா!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.
சொத்து குவிப்பு வழக்கில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது இன்னும் சில வழக்குகள் வேறு வேறு நீதிமன்றத்தில் உள்ளது.

அதேபோல் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது சென்னை ஹைக்கோட்டில் 2 வழக்குகள் உத்தரவு.
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் சசிகலா, பாஸ்கரன் இருவரும் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது அமலாக்கத்துறை ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளது.
சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு சேர்த்து 3 வழக்குகளும். இருவர் மீதும் தனி தனியாக 2 வழக்குகள் வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில்தான் இன்று சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். அவர் பெங்களூர் சிறையில் இருப்பதால் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு அவர் தனது வாக்குமூலத்தை ஆடியோ மூலம் பதிவு செய்தார்.
ஆனால் நீதிபதி மலர்மதி கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை, தெரியாது, நினைவில் இல்லை, தொடர்பு இல்லை என்பது போன்ற பதில்களை மட்டுமே சசிகலா அளித்துள்ளார். அதன்பின் கடைசியாக அமலாக்கத்துறை குறுக்கு விசாரணைக்கு மட்டும் சசிகலா ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு ஜனவரி 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி நடக்கும் விசாரணையின் போது சசிகாலாவை நேரில் ஆஜர்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications