சென்னையில் 3-வது நாளாக பெய்த கனமழை.. இந்த 5 மாவட்டங்களில் பலத்த மழை கொட்ட போகுது!
சென்னை: சென்னையில் இன்று 3-வது நாளாக சில இடங்களில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழ்நாட்டின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை கொட்டியது. சென்னையின் நகர்ப்புற பகுதிகள் மட்டுமில்லாது புறநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

சென்னையில் இன்றும் மழை
இந்த நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். விழுப்புரத்திலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

விழுப்புரத்தில் வெள்ளம்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் வெள்ளநீர் புகுந்து குளம்போல் காட்சியளித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (19ஆம் தேதி ) மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், மற்றும் ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற பகுதியில் லேசான மழையும், மற்ற பகுதியில் வறண்ட சூழ்நிலையும் காணப்படும் என்று கூறியுள்ளது.

கோவை, தேனி
நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அல்லது பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை எப்படி?
சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications