யூ டூ ப்ரூட்டஸ், ஜெகத் கஸ்பரை விட்டுட்டு.. கனல் கண்ணன் கைதா? நாளை பாருங்க! காடேஸ்வரா விட்ட அறிக்கை!
சென்னை : பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன்,"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனல் கண்ணன் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து பல நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் இன்று புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

கனல் கண்ணன்
இந்நிலையில் கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சுதந்திர தினத்தில் ஜனநாயகப் படுகொலை. கொடுங்குற்றவாளி போல் கனல் கண்ணன் அவர்களை கைது செய்த நோக்கம் என்ன? கருத்துரிமை இந்துக்களுக்கும், இந்து இயக்கங்களுக்கும் கிடையாதா?

இந்து முன்னணி
தில்லை நடராஜர் முதற்கொண்டு இந்து தெய்வங்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்திடும் யாரொருவரின் மீதும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.1மணிநேரம் கொடுங்கள் சங்கிகளை முடித்துக் கட்டுகிறோம் என்று கொலை மிரட்டல் விடுத்த SDPI ஜன்னத் ஆலிமா மீது நடவடிக்கை இல்லை.

இந்து முன்னணி
தில்லை நடராஜர் முதற்கொண்டு இந்து தெய்வங்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்திடும் யாரொருவரின் மீதும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.1மணிநேரம் கொடுங்கள் சங்கிகளை முடித்துக் கட்டுகிறோம் என்று கொலை மிரட்டல் விடுத்த SDPI ஜன்னத் ஆலிமா மீது நடவடிக்கை இல்லை.

ஜெகத் கஸ்பர்
இஸ்லாமியர்கள் தனி நாடு கேளுங்கள் என்று பிரிவினை பேசிய ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை இல்லை. இன்று நாடே சுதந்திர தினம் கொண்டாடுகின்ற வேளையில் இது துக்க தினம், கருப்பு தினம் என்று தேச விரோத கருத்துக்களை, குறிப்பாக ஈவேரா சொன்ன கருத்துக்களை பதிவிட்டு வருகின்ற திராவிட சித்தாந்தவாதிகள் மற்றும் அமைப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.
Recommended Video

நாளை ஆர்பாட்டம்
மாறாக கணல் கண்ணன் கூறிய கருத்தை மிகப் பெரிய துவேஷமாக கருதி, ஒரு பயங்கரவாதியைப்போல் மிக ரகசியமாக கைது செய்திருப்பது திராவிட மாடல் அரசின் வன்மத்தின் உச்சம். கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து நாளை காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக அரசின் தொடரும் இந்து விரோத பாரபட்ச அணுகுமுறை மக்கள் மனதில் மிகப்பெரும் கோபத்தை உருவாக்கி வருகிறது. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்." என கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications